Monday, July 7, 2008

தலை மலை அய்யன் - ஆடுமாடு

ஊர்ல மழைதான் முக்கியம். வெவசாயத்துக்கு அதுதான உயிரு. எட்டு மாச கோடையில மழை வாரது கஷ்டம்தான். வெவசாயிவோ திக்குமுக்காடி போவாவோ. ‘இப்ப மழை வந்தா பயிருலாம் பொழச்சுக்கிடுமே’ங்குத நெலமை வந்தா, ஊருல இருக்குத ஐயமாருவோ வூட்டுக்கு வெஷயம் போவும்.

ஊர்ல மழைதான் முக்கியம். வெவசாயத்துக்கு அதுதான உயிரு. எட்டு மாச கோடையில மழை வாரது கஷ்டம்தான். வெவசாயிவோ திக்குமுக்காடி போவாவோ. ‘இப்ப மழை வந்தா பயிருலாம் பொழச்சுக்கிடுமே’ங்குத நெலமை வந்தா, ஊருல இருக்குத ஐயமாருவோ வூட்டுக்கு வெஷயம் போவும்.

நாலாவது நாளுலேயே சில சமயத்துல மழை பெஞ்சுரும். அஞ்சு நாளு வரைக்கும் மழை பெய்யலைன்னு வையுங்கோ. கோயிலுக்கு வெளியில இருக்குத சாமி செல மேல ( கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில வந்தாருங்கதுக்கு கதை இருக்கு) அந்த பச்ச மௌகாயை அரைச்சு, சாமி செல மேல பூரா பூசிருவாவோ. அந்தானி, எல்லாரும் அவ்வவ்வோ வூட்டுக்கு போயிருவாவோ. மௌகா பூசுன 24 மணி நேரத்துல மழையை கொண்டு வந்திருவாரு சாமி. இதனால தலை மலை அய்யன்னு சாமிக்கு பேரு.

கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில இருக்காரு? அந்த கதைய கேளுங்க.கோடையிலயெல்லாம் ராமநதில தண்ணி வத்திபோவும். அணையில கொஞ்சமாத்தான் தேங்கி கெடக்கும். அணைக்குள்ள இறங்கி மேற்காப்ல போனா மலை. அந்த வழியாதான் எல்லாரும் வெறவு வெட்டிட்டு வருவாவோ.

ஒரு நாளு, புள்ளதாச்சி பொம்பளை ஒருத்தி வெறவு வெட்ட போயிருக்கா. போற வழியிலேயே அவளுக்கு வயித்து வலி வந்துட்டு. என்ன பண்ணன்னு தெரியாம, உக்காந்து வயித்தை புடிச்சுட்டு அழுதிருக்கா. பின்னால வந்த இன்னொருத்தி, இங்ஙன இருந்து இவளுக்கு எப்படி பெரசவம் பார்க்கன்னு யோசிச்சிருக்கா. அந்தானி, ஆபத்துக்கு பாவமில்லைன்னு கோயிலுக்குள்ள அவளை கூட்டிட்டு போயிட்டா. அங்ஙனயே பெரசவம் நடந்திருக்கு.

இதை பாத்துக்கிட்டு சாமி அங்க இருக்க முடியுமா? சாமி வெளியில வந்து உக்காந்துட்டாரு. பெரசவம் நல்லபடியா நடந்து அவளும் பிள்ளைய தூக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டா. ஆனா சாமி மட்டும் உள்ள போவாம வெளியிலயே உக்காந்திகிட்டாரு. இதுதான் சாமி கோயில விட்டு வெளிய வந்த கதை.கடையம் பக்கம் போனீங்கன்னா, ராமநதிக்குள்ள இருக்குத, இந்த தலை மலை அய்யனை பார்த்துட்டு வாங்க.

No comments: